Saturday, March 22, 2008

சர்வதேச தண்ணீர் நாள் (22/3/2008)

நீர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
- திருக்குறள்

இன்று தண்ணீர் நாள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப் படுகிறது, ஐ.நா.வின் பொருளியல் மற்றும் சமூக குழுமத்தின் ஆய்வின்படி உலகில் 70% மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்கிறது.ஆண்டுதோரும் 5மில்லியன் மக்கள் மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் நோயின் மூலம் இறந்து விடுகின்றனர்,இது போரில் இறப்பவர்களை விட 10 மடங்கு அதிகம்,பெறும்பாலும் நிலத்தடிநீரை நம்பி இருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆண்டுக்கு 4மீட்டர் அளவுக்கு நிலத்தடிநீர் குறைந்துகொண்டு வருகிறது.75000 கிராமமக்களின் நீராதாரமாக விளங்கிய “வைத்தார்னா” ஏரியை கோக்கோ கோலா நிறுவனம் விலை கொடுத்து வாங்கிவிட்டது.இதுபோன்று நீர் ஆதாரங்கள் தனியார்மயமாகும் போக்கும் அங்கங்கே அரங்கேற்றப்படுகிறது.

2025ல் இருக்கும் பெறும் பிரச்சனை குடிநீர் பிரச்சனை தான் என்றும் ஐ.நா அறிவித்துள்ளது.தினசரி செய்திகளில் “இன்றய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ற செய்தியோடு இன்றய “தண்ணீர் விலை நிலவரம்” எனும் செய்திவந்தாலும் ஆச்சிரியமில்லை.


தண்ணீரை சேமிப்போம்

தமிழக அரசின் 2008-09 ஆண்டிற்கான பட்ஜெட்டில், மாநில முக்கிய நதிகள் இணைக்கப்படும் எனும் அறிவிப்பு பாராட்டுக்குரியது,தமிழகம் போன்ற மாநிலங்களின் தண்ணீர் பற்றாக்குறைக்கும் நதிநீர் பங்கீட்டு பிரச்சனைக்கும் ஒரேத் தீர்வு தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் தான்.நமது மக்கள் சக்தி இயக்க நிறுவுனர் அய்யா திரு.எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் நடைபயணம் மேற்கொண்டதும் இதற்காகத்தான். ஆனால் இத்திட்டம் நிறைவேற்ற ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில்,தமிழக அரசின் மாநில நதிகள் இணைக்கப்படும், திட்டம் ஒரு முன்னோடியாக அமையும்.மத்திய அரசும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளது.



நன்றி : தினமலர்


வெள்ளக் காலங்களில் காவேரி ஆற்றில் பெருகும் உபரி நீரை,வறண்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக காவேரி - அக்னியாறு - கோரையாறு - பாம்பாறு, - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டமாக காவேரி ஆற்றின் குறுக்கே கட்டளை பகுதியில் தடுப்பணை கட்டும் திட்டம் 165கோடி செலவில் செயல்படுத்தபடும் என அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

ஆனால் இத்திட்டம் வெறும் கோப்புகளில் எழுதப்பட்டு “கானல் நீராகாமல்” தமிழகமெங்கும் “கானும் நீராகினால்” மகிழ்ச்சியே.

நம்மால் முடிந்த வரை தண்ணீரை வீணாக்கமலும் விரையமாக்காமலும் பயன்ப்படுத்த சர்வதேச தண்ணீர் நாளான இன்று உறுதிகொள்வோம்.

“யாருக்கு தண்ணீர் சொந்தம் என்பது”,
“தாகம் எடுப்பவனுக்கு மட்டும் தான்”, என்ற நிலை வரும்......


மக்கள் சக்தி இயக்கம்
நம்மால் முடியும் மாத இதழ்

No comments: