Monday, March 17, 2008

தரமணியில் தரைமட்டமாக்கப் பட்ட நீதி

திங்கள் கிழமை (17/03/2008) மாலை நமது மக்கள் சக்தி இயக்கத்திற்கு வந்த அவசர அழைப்பை ஏற்று தரமணியை அனுகினோம்.அங்கு கமலநாதன் என்பவரது வீடு இடிக்கப்பட்டு அலங்கோல நிலையில் இருந்தது. மேலும் விசாரிக்கையில் நமக்கு கிடைத்த தகவல்கள்....

சென்னை தரமணியில் கமலநாதன் 1993 முதல் வசித்து வருகிறார்.(1200 சதுர அடி).குடிசை மாற்று வாரியமும் 1997ல் அவருக்கே அந்த இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.அதற்கான தொகையையும் 1995-1996ல் அவர் வாரியத்திடம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் அங்கு வசிக்காத திரு.லலிதா கதிர்வேலுக்கும் அந்த இடம் (600 சதுர அடி)ஒதுக்கபட்டுள்ளதாக அறிந்த கமலநாதன்,குடிசைமாற்று வாரியத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்,இதை தொடர்ந்து குடிசை மாற்று வாரியம் திரு.லலிதா கதிர்வேலுக்கு ஒதுக்கீடு செயத்தை ரத்து செய்த ஆனைப் பிறப்பித்தது.மேலும் அதே இடத்தில் வசித்து வரும் தனக்கே அவ்விடத்தை ஒதுக்கவேண்டும் என வலியுருத்தி வழக்கும் தொடுத்துள்ளார் கமலநாதன்.இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிழுவையில் உள்ளது.

குடிசை மாற்று வாரிய இடத்தை வாங்குவதும் விற்பதும் சட்டப்படிக் குற்றம் அப்படி இருந்தும் நிலத்தில் எந்த வித உரிமையும் இல்லாத திரு.லலிதா கதிர்வேலு அந்த இடத்தை விஷ்னு என்பவருக்கு விற்று விட்டார்,தற்போது அதை காங்கிரஸ் பிரமுகர் தரமணி எஸ்.சார்லஸ் அவர்கள் வாங்கி,15/03/2008 அன்று காலை கமலநாதனின் வீட்டிற்கே சென்று தான் இந்த நிலத்தை வாங்கிவிட்டதாகவும் உடனடியாக இவ்விடத்தை காலி செய்யும் படி மிரட்டியுள்ளார்.இதனால் கமலநாதன் தரமணி J.7 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார், இதை விசாரித்த உதவி ஆய்வாளர் 17/03/2008 திங்கள்கிழமை காலை காவல் ஆய்வாளர் முன்னிலையில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று அனுப்பிவைத்துள்ளார். ஆனால் கதர்சட்டை காங்கிரஸ்காரர் சார்லஸ் தனது 15 ஆட்களுடன் மதியம்(15/03/2008) கமலநாதன் இடத்தை ஆக்கிரமித்து அங்கு உள்ள வாழை போன்றவற்றை வெட்டிசாய்த்து, மதில் சுவர் கட்ட ஆரம்பித்தனர்,தடுக்க முயன்றும் பயணில்லை,அஹிம்சையை மறந்து காங்கிரஸ்காரர் சார்லஸ் தொடர்ந்து அங்குள்ள குளியளரையை இடித்து ஒரு கொட்டகையும் அமைத்தார்.ஆனால் மீண்டும் அஹிம்சை வழியில் உரிமைக்காக காவல் துறையிடம் முறையிட விறைந்தார் கமலநாதன்.

காவல் நிலையத்தில் உள்ள ஏட்டு சக்திவேலை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்,ஏட்டு சக்திவேல் மதில் சுவர் கட்டுமானத்தை நிறுத்தி காவல் நிலையத்திற்கு வருமாறு சார்லஸிடம் கூறி சென்றுவிட்டார். கமலநாதனும் தன் மனைவியுடன் காவல் நிலையம் சென்றனர்.இச்சமயத்தில் வீட்டில் இருந்த கமலநாதனின் பதின்மவயது பெண்களை சார்லஸின் ஆட்கள் அரிவாள் கொண்டு மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் திங்கள் கிழமை (17/03/2008) அன்று காலை பேச்சுவார்த்தைக்கு காவல் நிலையம் வந்தார், ஆனையர் இல்லாததால் மாலை வரும்படி அனுப்பிவைக்கப் பட்டார்.ஆனால் அவர் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அன்று மாலை அவரது வீடு முற்றிலுமாக இடிக்கப்பட்டது,15/3/2008 புகார் கொடுத்த அன்றே துரிதமாக நடவடிக்கையை காவல் துறை எடுத்திருந்தால் கமலநாதனின் வீடு காக்கப் பட்டிருக்கும்.ஆனால் அவரது உடமைகள் தெருவில் வீசிஎறியப்பட்டன.தான் வசித்த தெருவில் தன் மனைவி மகளுடன் அகதியாக்கபட்டார் கமலநாதன்.கதர்சட்டைக்குத் தான் அகதிகள் கிள்ளுகீரையாயிற்றே.ஆனால் காவல் துறையும் கைகட்டி நின்றதுதான் வேதனையின் உச்சகட்டம்.

தான் வசித்த வீட்டிற்காக பதின்மவயது இரு பெண்கள் மற்றும் மனைவியுடன் போராடிக்கொண்டிருக்கும் கமலநாதனின் விடியளை எந்த "கை"கொண்ட காங்கிரஸ் காரரும் தடுக்க இயலாது. மக்களின் காவலன் காவல் துறை இதை பரிீசீலிக்குமா???

மக்கள் சக்தி இயக்கம்

"நம்பு தம்பி நம்மால் முடியும்" மாத இதழ்.





வீடு இடிக்கும் முன் எடுத்தப் படம் வீடு இடித்தப் பின் எடுத்தப் படம்






மக்கள் சக்தி இயக்கம்
"நம்பு தம்பி நம்மால் முடியும்" மாத இதழ்.

No comments: