Tuesday, July 8, 2008

இயக்கத்தில் இன்று...

சமூக, அரசியல் மாற்றத்தை நோக்கிய நமது மக்கள் சக்தி இயக்கத்தின் சீரியபயணம், அதன் இலக்கை நோக்கி சிறந்தவகையில் நகர்ந்து வருகிறது. வெளிப்படையான அரசுதுறை நிர்வாகத்தை வலியுறுத்தும் நமது இயக்கம்,தனது நிர்வாகத்தையும்,அதன் செயல்பாடுகளையும் வெளிப்படையாகவே இயக்கி வருகிறது. அதன் வெளிப்பாடே “இயக்கத்தில் இன்று” என்ற அங்கம்.பல்வேறு பகுதிகளில் நமது இயக்கத் தோழர்கள், “மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தும், மக்களை அதிகாரப்படுத்தும் தங்களது களப்பணிகளை செய்து வருகிறார்கள்.அக்களபணிகளையும், இயக்கத்தின் செயல்பாடுகளையும் தொகுக்கும் நாட்குறிப்பேடு தான் “இயக்கத்தில் இன்று”.

அதுமட்டுமல்லாமல், உடலால் பல்வேறு இடங்களிலும்,பல்வேறு நாடுகளிலும் பிரிந்திருக்கும் மக்கள் சக்தியின் ஒத்த உணர்வுள்ள உள்ளங்களை இணைக்கவும் “இயக்கத்தில் இன்று” அங்கம் உதுவும்...

ஜூலை-16 புதன் கிழமை- 2008 (16/07/2008):

அணுசக்தி உடன்பாடு,நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற தலைப்பில் “விண்” தொலைகாட்சியில் ‘நீதியின் குரல்” அங்கம் இடம்பெற்றது, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட இந்த அங்கத்தில், நமது இயக்க தோழரும் கலந்து கொண்டு தனது கருத்தை எடுத்துரைத்தார்.

சென்னையில், மருத்துவர்.ராமதாஸ் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் அவரை சந்தித்து இந்த மாத நமது “நம்மால் முடியும்” இதழை நேரடியாக அவரிடம் இயக்க நண்பர்கள் கொடுத்தனர்.

சென்னை அண்ணாநகரில் திரு.பிரகாஷ் காரட் அவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இயக்க நண்பர்களும் கலந்து கொண்டு அணுசக்தி உடன்பாடு தொடர்பான அவர்து கருத்தை கேட்டறிந்தனர்

ஜூலை-15 செவ்வாய்க் கிழமை- 2008 (15/07/2008):

பிரபல எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் அவர்களை பற்றிய ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் திரு.ரவிசுப்ரமணியன் அவர்களுடனான கலந்துரையாடல் சென்னை அடையாரில் நடந்தது.நமது மக்கள் சக்தி இயக்கத்தின் உறுப்பினர்களும்,5வது தூண் அமைப்பின் இந்திய தலைவர் திரு.விஜய்ஆனந்த் அவர்களும் இதில் பங்கேற்றார்.சம கால சமூகநிகழ்வு.அரசியல் மாற்றம் குறித்தும் விவாதிக்கப் பட்டது.

காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் “உலகமயமாக்கலும்,உள்ளாட்சி அமைப்புகளும்” என்ற கருத்தரங்கத்தின் முதல் நாள் கூட்டம் சிறப்பாக நடந்தது.நமது இயக்கதோழரும் இதில் பங்கேற்று, உலகமயமாக்கல்,உள்ளாட்சி அமைப்புகளை குறித்த மக்கள் சக்தி இயக்கத்தின் பார்வையை பதியவைத்தார்.

ஜூலை 14 - திங்கள் கிழமை- 2008 (14/07/2008):

“உலகமயமாக்கலும்,உள்ளாட்சி அமைப்புகளும்” என்ற தலைப்பில் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் ஜூலை 15,16 தேதிகளில் கருத்தரங்கம் ஒன்று நடக்க உள்ளது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட பஞ்சாயத்தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.நமது இயக்கத்தை சார்ந்த தோழர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

ஜூலை 12 - சனிக் கிழமை - 2008 (12/07/2008):

கிராம வளர்ச்சியை மையப்படுத்தி கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சிறந்த பத்திரிக்கையாளரான திரு.சசிநாத் அவர்களுடன், விவசாயம் குறித்து ஒர் கலந்துரையாடல் நிகழ்வு சென்னையில் இன்று நடந்தது, மக்கள் சக்தி இயக்கமும் அந்நிகழ்வில் பங்கேற்றது.

தகவல் அறியும் உரிமைசட்டம் தொடர்பாக நமது இயக்கம் கையேட்டு புத்தகத்தை வெளியீட உள்ளது,அதுசார்ந்த பணிகளும் இன்று நடந்தன,

ஜூலை 11 - வெள்ளிக் கிழமை - 2008 (11/07/2008):

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துள்ள 5வது தூண் அமைப்பின் இந்திய தலைவர் திரு விஜய் ஆனந்த் அவர்களுடன்,நமது மக்கள் சக்தி இயக்கத்தின் உறுப்பினர்கள் இன்று சந்தித்து கலந்துறையாடினர். 5வது தூண் அமைப்பின் செயல்பாடுகளைக் குறித்தும்,மக்களை அதிகாரப்படுத்தும், மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தும் நமது இயக்கத்தின் களப்பணிகள் குறித்தும் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது.

ஜூலை 10 - வியாழக் கிழமை - 2008 (10/07/2008):

கன்னியாகுமரியில் நடக்கவிருக்கும் பஞ்சாயத்து கூட்டங்களில் பங்குபெற நமது மக்கள் சக்தியின் உறுப்பினர் அங்கு முகாமிட்டுள்ளார். மக்களை அதிகாரப்படுத்தும்,மக்களே திட்டமிடும் வளர்ச்சிதிட்டங்களைக் குறித்து அக்கூட்டத்தில் இயக்க தோழர் விளக்கவும் உள்ளார்.

பத்திரிக்கையில் இடம்பெறும் விளம்பரம் தொடர்பான அலுவலகப் பணியில் சென்னை இயக்க தோழர்கள் ஈடுபட்டனர்.

ஜூலை 09 - புதன் கிழமை - 2008 (09/07/2008):


விருதுநகர் மாவட்டம் : நதிக்குடி பஞ்சாயத்தில் இன்று நடந்த மாதாந்திரக் கூட்டத்தில் மக்கள் சக்தி இயக்கமும் பங்கேற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர்களுக்கு , மக்களே விவாதித்து,மக்களே திட்டமிடும் வளர்ச்சிதிட்டத்தை(காந்திகிராம் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பபட்டுள்ள திட்டம்)குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

சென்னை மாவட்டம் : தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக இன்று இயக்கத்திற்கு வந்த 20க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கு தகுந்த விவரமும்,விளக்கமும் கொடுக்கப்பட்டது. அடுத்த மாதத்திற்கான இதழைக் குறித்தும்,இதழில் இடம்பெறும் விளம்பரம் குறித்தும் இயக்கத் தோழர்களின் கூட்டம் மாலையில் நடந்தது.

கோவை மாவட்டம் : கோவையில் உள்ள பஞ்சாயத்துக்களுடன் அடுத்த சனிக்கிழமை(ஜூலை 19 ) நடைபெறும் மதுஒழிப்பு ஆர்வலர்கள் கூட்டம்கோவையில் உள்ள பஞ்சாயத்துக்களுடன் அடுத்த சனிக்கிழமை(ஜூலை 19 ) நடைபெறும் மதுஒழிப்பு ஆர்வலர்கள் கூட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு விடுதியில் மதியம் 2.30க்கு கூட்டம் நடக்கும் என இன்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக அழைப்பிதழ் அடிக்கும் பணியும் இன்று துவங்கியது

ஜூலை 08 - செவ்வாய் கிழமை - 2008 (08/07/2008):

விருதுநகர் மாவட்டம் : கிராம மக்களின் சமூக,பொருளாதார மேம்பாட்டை மத்திய,மாநில அரசுகளால் கொண்டுவர முடியவில்லை.அடித்தளத்தில் உள்ள பஞ்சாயத்துக்களால் அம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். தங்கள் தேவைகளை கள ஆய்வுசெய்து, அவர்களே திட்டமாகத் தயாரிக்கும் பணியினை நமது இயக்கம் பஞ்சாயத்துடன் இணைந்து செயல்படுத்திவருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை ஒன்றியத்தில் உள்ள நதிக்குடி ஊராட்சியில் கடந்த மாதம் கள ஆய்வை மேற்கொண்டது,பின் அவை திட்டமாக தீட்டப்பட்டது.முழுமையாக தீட்டிய நதிக்குடி ஊராட்சியின் திட்டம் இன்று காந்திகிராம் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பபட்டுள்ளது.

கோவை மாவட்டம் : ஜூலை 19ல் கோவையில் மதுஒழிப்பு ஆர்வலர்கள் கூட்டம் நடக்க உள்ளது,கூட்டம் சம்மந்தமான களப்பணிகளை இயக்கதோழர்கள் செய்து வருகின்றனர்.

சென்னை மாவட்டம் : ஜூலை மாதத்திற்கான “நம்மால் முடியும்” இதழை தாபால் மூலம் அனுப்பும் பணி நடைப்பெற்று வருகிறது. அடுத்த மாதத்திற்கான நமது இதழின் நேர்காணலில் திரு.தொல்.திருமாவளவன் அவர்களை இடம்பெறசெய்ய,இயக்க தோழர்கள் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைமையகத்தை இன்று அனுகியுள்ளனர்.

Friday, July 4, 2008

"நம்மால் முடியும்" மாத இதழ் -ஜூலை08

“நம்மால் முடியும் ஜூலை-08 மாத இதழ்” -முக்கிய செய்திகள்...
மருத்துவர்.ராமதாஸ் அவர்களுடன் நேர்காணல்...
  • காரத்துக்கும்,பரதனுக்கும் ஏன்புரியவில்லை?....
  • சூடானவிவாதங்கள், தீர்வைநோக்கிய பயணங்கள்...
  • மேலும் படிக்க...